7. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي رَكْبٍ مِنْ قُرَيْشٍ ـ وَكَانُوا تُجَّارًا بِالشَّأْمِ ـ فِي الْمُدَّةِ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَادَّ فِيهَا أَبَا سُفْيَانَ وَكُفَّارَ قُرَيْشٍ، فَأَتَوْهُ وَهُمْ بِإِيلِيَاءَ فَدَعَاهُمْ فِي مَجْلِسِهِ، وَحَوْلَهُ عُظَمَاءُ الرُّومِ ثُمَّ دَعَاهُمْ وَدَعَا بِتَرْجُمَانِهِ فَقَالَ أَيُّكُمْ أَقْرَبُ نَسَبًا بِهَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ فَقَالَ أَبُو سُفْيَانَ فَقُلْتُ أَنَا أَقْرَبُهُمْ نَسَبًا. فَقَالَ أَدْنُوهُ مِنِّي، وَقَرِّبُوا أَصْحَابَهُ، فَاجْعَلُوهُمْ عِنْدَ ظَهْرِهِ. ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ قُلْ لَهُمْ إِنِّي سَائِلٌ هَذَا عَنْ هَذَا الرَّجُلِ، فَإِنْ كَذَبَنِي فَكَذِّبُوهُ. فَوَاللَّهِ لَوْلاَ الْحَيَاءُ مِنْ أَنْ يَأْثِرُوا عَلَىَّ كَذِبًا لَكَذَبْتُ عَنْهُ، ثُمَّ كَانَ أَوَّلَ مَا سَأَلَنِي عَنْهُ أَنْ قَالَ كَيْفَ نَسَبُهُ فِيكُمْ قُلْتُ هُوَ فِينَا ذُو نَسَبٍ. قَالَ فَهَلْ قَالَ هَذَا الْقَوْلَ مِنْكُمْ أَحَدٌ قَطُّ قَبْلَهُ قُلْتُ لاَ. قَالَ فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ قُلْتُ لاَ. قَالَ فَأَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَقُلْتُ بَلْ ضُعَفَاؤُهُمْ. قَالَ أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ قُلْتُ بَلْ يَزِيدُونَ. قَالَ فَهَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ قُلْتُ لاَ. قَالَ فَهَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ قُلْتُ لاَ. قَالَ فَهَلْ يَغْدِرُ قُلْتُ لاَ، وَنَحْنُ مِنْهُ فِي مُدَّةٍ لاَ نَدْرِي مَا هُوَ فَاعِلٌ فِيهَا. قَالَ وَلَمْ تُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيهَا شَيْئًا غَيْرُ هَذِهِ الْكَلِمَةِ. قَالَ فَهَلْ قَاتَلْتُمُوهُ قُلْتُ نَعَمْ. قَالَ فَكَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ قُلْتُ الْحَرْبُ بَيْنَنَا وَبَيْنَهُ سِجَالٌ، يَنَالُ مِنَّا وَنَنَالُ مِنْهُ. قَالَ مَاذَا يَأْمُرُكُمْ قُلْتُ يَقُولُ اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ، وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ، وَيَأْمُرُنَا بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالصِّلَةِ. فَقَالَ لِلتَّرْجُمَانِ قُلْ لَهُ سَأَلْتُكَ عَنْ نَسَبِهِ، فَذَكَرْتَ أَنَّهُ فِيكُمْ ذُو نَسَبٍ، فَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي نَسَبِ قَوْمِهَا، وَسَأَلْتُكَ هَلْ قَالَ أَحَدٌ مِنْكُمْ هَذَا الْقَوْلَ فَذَكَرْتَ أَنْ لاَ، فَقُلْتُ لَوْ كَانَ أَحَدٌ قَالَ هَذَا الْقَوْلَ قَبْلَهُ لَقُلْتُ رَجُلٌ يَأْتَسِي بِقَوْلٍ قِيلَ قَبْلَهُ، وَسَأَلْتُكَ هَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ فَذَكَرْتَ أَنْ لاَ، قُلْتُ فَلَوْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ قُلْتُ رَجُلٌ يَطْلُبُ مُلْكَ أَبِيهِ، وَسَأَلْتُكَ هَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ فَذَكَرْتَ أَنْ لاَ، فَقَدْ أَعْرِفُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَذَرَ الْكَذِبَ عَلَى النَّاسِ وَيَكْذِبَ عَلَى اللَّهِ، وَسَأَلْتُكَ أَشْرَافُ النَّاسِ اتَّبَعُوهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَذَكَرْتَ أَنَّ ضُعَفَاءَهُمُ اتَّبَعُوهُ، وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ، وَسَأَلْتُكَ أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ فَذَكَرْتَ أَنَّهُمْ يَزِيدُونَ، وَكَذَلِكَ أَمْرُ الإِيمَانِ حَتَّى يَتِمَّ، وَسَأَلْتُكَ أَيَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ فَذَكَرْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الإِيمَانُ حِينَ تُخَالِطُ بَشَاشَتُهُ الْقُلُوبَ، وَسَأَلْتُكَ هَلْ يَغْدِرُ فَذَكَرْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الرُّسُلُ لاَ تَغْدِرُ، وَسَأَلْتُكَ بِمَا يَأْمُرُكُمْ، فَذَكَرْتَ أَنَّهُ يَأْمُرُكُمْ أَنْ تَعْبُدُوا اللَّهَ، وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَيَنْهَاكُمْ عَنْ عِبَادَةِ الأَوْثَانِ، وَيَأْمُرُكُمْ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ. فَإِنْ كَانَ مَا تَقُولُ حَقًّا فَسَيَمْلِكُ مَوْضِعَ قَدَمَىَّ هَاتَيْنِ، وَقَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّهُ خَارِجٌ، لَمْ أَكُنْ أَظُنُّ أَنَّهُ مِنْكُمْ، فَلَوْ أَنِّي أَعْلَمُ أَنِّي أَخْلُصُ إِلَيْهِ لَتَجَشَّمْتُ لِقَاءَهُ، وَلَوْ كُنْتُ عِنْدَهُ لَغَسَلْتُ عَنْ قَدَمِهِ. ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّذِي بَعَثَ بِهِ دِحْيَةُ إِلَى عَظِيمِ بُصْرَى، فَدَفَعَهُ إِلَى هِرَقْلَ فَقَرَأَهُ فَإِذَا فِيهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ. سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى، أَمَّا بَعْدُ فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ، أَسْلِمْ تَسْلَمْ، يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الأَرِيسِيِّينَ وَ{يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَنْ لاَ نَعْبُدَ إِلاَّ اللَّهَ وَلاَ نُشْرِكَ بِهِ شَيْئًا وَلاَ يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ} قَالَ أَبُو سُفْيَانَ فَلَمَّا قَالَ مَا قَالَ، وَفَرَغَ مِنْ قِرَاءَةِ الْكِتَابِ كَثُرَ عِنْدَهُ الصَّخَبُ، وَارْتَفَعَتِ الأَصْوَاتُ وَأُخْرِجْنَا، فَقُلْتُ لأَصْحَابِي حِينَ أُخْرِجْنَا لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ، إِنَّهُ يَخَافُهُ مَلِكُ بَنِي الأَصْفَرِ. فَمَا زِلْتُ مُوقِنًا أَنَّهُ سَيَظْهَرُ حَتَّى أَدْخَلَ اللَّهُ عَلَىَّ الإِسْلاَمَ. وَكَانَ ابْنُ النَّاظُورِ صَاحِبُ إِيلِيَاءَ وَهِرَقْلَ سُقُفًّا عَلَى نَصَارَى الشَّأْمِ، يُحَدِّثُ أَنَّ هِرَقْلَ حِينَ قَدِمَ إِيلِيَاءَ أَصْبَحَ يَوْمًا خَبِيثَ النَّفْسِ، فَقَالَ بَعْضُ بَطَارِقَتِهِ قَدِ اسْتَنْكَرْنَا هَيْئَتَكَ. قَالَ ابْنُ النَّاظُورِ وَكَانَ هِرَقْلُ حَزَّاءً يَنْظُرُ فِي النُّجُومِ، فَقَالَ لَهُمْ حِينَ سَأَلُوهُ إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ حِينَ نَظَرْتُ فِي النُّجُومِ مَلِكَ الْخِتَانِ قَدْ ظَهَرَ، فَمَنْ يَخْتَتِنُ مِنْ هَذِهِ الأُمَّةِ قَالُوا لَيْسَ يَخْتَتِنُ إِلاَّ الْيَهُودُ فَلاَ يُهِمَّنَّكَ شَأْنُهُمْ وَاكْتُبْ إِلَى مَدَايِنِ مُلْكِكَ، فَيَقْتُلُوا مَنْ فِيهِمْ مِنَ الْيَهُودِ. فَبَيْنَمَا هُمْ عَلَى أَمْرِهِمْ أُتِيَ هِرَقْلُ بِرَجُلٍ أَرْسَلَ بِهِ مَلِكُ غَسَّانَ، يُخْبِرُ عَنْ خَبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا اسْتَخْبَرَهُ هِرَقْلُ قَالَ اذْهَبُوا فَانْظُرُوا أَمُخْتَتِنٌ هُوَ أَمْ لاَ. فَنَظَرُوا إِلَيْهِ، فَحَدَّثُوهُ أَنَّهُ مُخْتَتِنٌ، وَسَأَلَهُ عَنِ الْعَرَبِ فَقَالَ هُمْ يَخْتَتِنُونَ. فَقَالَ هِرَقْلُ هَذَا مَلِكُ هَذِهِ الأُمَّةِ قَدْ ظَهَرَ. ثُمَّ كَتَبَ هِرَقْلُ إِلَى صَاحِبٍ لَهُ بِرُومِيَةَ، وَكَانَ نَظِيرَهُ فِي الْعِلْمِ، وَسَارَ هِرَقْلُ إِلَى حِمْصَ، فَلَمْ يَرِمْ حِمْصَ حَتَّى أَتَاهُ كِتَابٌ مِنْ صَاحِبِهِ يُوَافِقُ رَأْىَ هِرَقْلَ عَلَى خُرُوجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَّهُ نَبِيٌّ، فَأَذِنَ هِرَقْلُ لِعُظَمَاءِ الرُّومِ فِي دَسْكَرَةٍ لَهُ بِحِمْصَ ثُمَّ أَمَرَ بِأَبْوَابِهَا فَغُلِّقَتْ، ثُمَّ اطَّلَعَ فَقَالَ يَا مَعْشَرَ الرُّومِ، هَلْ لَكُمْ فِي الْفَلاَحِ وَالرُّشْدِ وَأَنْ يَثْبُتَ مُلْكُكُمْ فَتُبَايِعُوا هَذَا النَّبِيَّ، فَحَاصُوا حَيْصَةَ حُمُرِ الْوَحْشِ إِلَى الأَبْوَابِ، فَوَجَدُوهَا قَدْ غُلِّقَتْ، فَلَمَّا رَأَى هِرَقْلُ نَفْرَتَهُمْ، وَأَيِسَ مِنَ الإِيمَانِ قَالَ رُدُّوهُمْ عَلَىَّ. وَقَالَ إِنِّي قُلْتُ مَقَالَتِي آنِفًا أَخْتَبِرُ بِهَا شِدَّتَكُمْ عَلَى دِينِكُمْ، فَقَدْ رَأَيْتُ. فَسَجَدُوا لَهُ وَرَضُوا عَنْهُ، فَكَانَ ذَلِكَ آخِرَ شَأْنِ هِرَقْلَ. رَوَاهُ صَالِحُ بْنُ كَيْسَانَ وَيُونُسُ وَمَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 6
7. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா குறைஷித் தலைவர்களில் ஒருவரான) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
என்னிடமும் குறைஷி இறைமறுப் பாளர்களிடமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபியா) ஒப்பந் தம் செய்துகொண்டிருந்த காலகட்டத் தில் குறைஷியரின் வணிகக் குழு ஒன்று ஷாம் (சிரியா) நாட்டில் வணிகம் செய்துகொண்டிருந்தது.10
குறைஷி வணிகக் குழுவினருடன் இருந்த என்னை அழைத்துவரும்படி (கிழக்கு ரோமானியப் பேரரசர்) ஹிரக்ளீயஸ் ஆளனுப்பினார். நாங்கள் அவரிடம் வந்துசேர்ந்தோம். அவரும் அவருடைய ஆட்களும் ‘ஈலியா’வில் (பைத்துல் மக்தஸில்) இருந்தார்கள். (கிழக்கு) ரோமானிய அரசுப் பிரதிநிதிகள் தம்மைச் சூழ்ந்திருந்த அ(ரச)வைக்கு வரும்படி எங்களை ஹிரக்ளீயஸ் அழைத்தார். (நாங்கள் அங்கு போய்ச்சேர்ந்த) பிறகு (தமக்கு அருகில் வந்து அமருமாறு) எங்களை அழைத்ததுடன் தம்முடைய மொழிபெயர்ப்பாளரையும் அழைத்தார்.
(பிறகு எங்களைப் பார்த்து,) “தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டி ருக்கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?” என்று கேட்டார். நான் “நானே இவர்களில் (அவருக்கு) நெருங்கிய உறவினன்” என்று பதில ளித்தேன்.11 ஹிரக்ளீயஸ் (தம் அதிகாரி களிடம்), “அவரை என் அருகே அழைத்துவாருங்கள்; (அவருடன் வந்தி ருக்கும்) அவருடைய நண்பர்களையும் எனக்கருகில் கொண்டுவந்து இவரது முதுகுக்குப் பின்னால் நிறுத்துங்கள்” என்று கூறினார்.
பிறகு தம் மொழிபெயர்ப்பாளரிடம் “நான் இந்த மனிதரை (முஹம்மதை)ப் பற்றி இவரிடம் கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால், உடனே ‘அவர் பொய் சொல்கிறார்’ என்று கூறிவிட வேண்டும்” என அவருடைய நண்பர் களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்று சொன்னார்.
நான் பொய் சொன்னால் என் நண்பர்கள் என்னைக் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்ற வெட்கம் மட்டும் எனக்கு அப்போது இல்லாதிருந்தால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபியவர்களைப் பற்றிப் பொய்(யானத் தகவல்களைச்) சொல்லியிருப்பேன்.
பிறகு ஹிரக்ளீயஸ் என்னிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கேட்ட முதல் கேள்வி, “உங்களிடையே அந்த மனிதரின் குலம் எப்படிப்பட்டது?” என்பதே ஆகும். அதற்கு, “அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர்” என்று கூறி னேன். (பிறகு) அவர், “உங்களில் எவரேனும் இதற்குமுன் இப்படி எப்போதாவது (தம்மை ‘நபி’ என) வாதித்ததுண்டா?” என்று கேட்டார். நான் ‘இல்லை’ என்று பதிலளித்தேன். “அவருடைய முன்னோர்களில் அரசர் யாரேனும் இருந்திருக் கின்றாரா?” என்று கேட்டார். நான் ‘இல்லை’ என்றேன்.
“அவரை மக்களில் மேட்டுக் குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்ட வர்கள்) பின்பற்றுகின்றனரா?” என்று மன்னர் கேட்டார். அதற்கு நான், ‘இல்லை; பலவீனர்கள்தான் (அவரைப் பின்பற்றுகின்றனர்)” என்று சொன்னேன். “அவரைப் பின்பற்றுவோர் அதிகரித் துக்கொண்டே செல்கின்றார்களா? அல்லது குறைந்துகொண்டே போகின் றார்களா?” என்று கேட்டார். நான், “இல்லை; அவர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்” என்று கூறினேன்.
“அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு அதன்மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?” என்று கேட்டார். நான் ‘இல்லை’ என்று சொன்னேன். “அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்குமுன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்) நீங்கள் அவரைச் சந்தேகித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் ‘இல்லை’ என்றேன்.
“அந்த மனிதர் உடன்படிக்கையை மீறுகின்றாரா?” என்று கேட்டார். நான் “இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கை யின்) இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்பது எங்களுக்குத் தெரியாது” என்று சொன்னேன். இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அவர், “அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?” என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்றேன். அவர், “அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எப்படி அமைந்தன?” என்று கேட்டார். “எங்களுக்கிடையேயான போர் (கிணற்று) வாளிகள்தான்; (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒரு முறை) அவர் எங்களை வெல்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெல்வோம்” என்றேன்.
“அவர் உங்களுக்கு என்ன (செய்யும் படி) கட்டளையிடுகிறார்?” என்று கேட் டார். நான் “அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள்; அவனுக்கு எதனையும், யாரையும் இணையாக்காதீர்கள்; உங்கள் மூதாதையர் சொல்லிவருகின்ற (அறி யாமைக் கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும், ‘ஸகாத்’ கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், தன்மானத்துடன் வாழும் படியும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடுகின் றார்” என்று சொன்னேன்.
பிறகு ஹிரக்ளீயஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (பின்வருமாறு) கூறினார்:
(அபூசுஃப்யானிடம்) கூறிவிடு: நான் உம்மிடம் அவருடைய குலத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நீர், “அவர் எங்கள் மத்தியில் சிறந்த குலத்தை உடையவர்” என்று பதிலளித்தீர். இவ்வாறே இறைத் தூதர்கள் ஒரு சமுதாயத்தின் நற்குடியில்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நான் உம்மிடம் “(இவருக்கு முன்னர்) உங்களில் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீர் ‘இல்லை’ என்று பதிலளித் தீர். இவருக்கு முன்னர் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்திருந்(ததாக நீர் கூறியிருந்)தால், “தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தைப் பின்பற்றிச் செல்கின்ற ஒரு (சராசரி) மனிதர்தான் இவர்” என்று நான் சொல்லி யிருப்பேன்.
நான் உம்மிடம் “அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந் திருக்கின்றாரா” என்று கேட்டேன். அதற்கு நீர் ‘இல்லை’ என்று பதிலளித்தீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்(ததாக நீர் கூறியிருந்) தால், “தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தை(த் தாமும்) அடைய விரும்பும் ஒரு (சராசரி) மனிதர்தான் இவர்” என்று நான் கூறியிருப்பேன்.
நான் உம்மிடம் “அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதேனும் நீங்கள் சந்தேகித்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீர் ‘இல்லை’ என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)ôத அவர் இறைவன்மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்து கொண்டேன்.
நான் உம்மிடம் “மக்களில் மேட்டுக் குடியினர் அவரைப் பின்பற்றுகின்ற னரா? அல்லது பலவீனர்களா (ஒடுக்கப் பட்டவர்களா)?” என்று கேட்டேன். அதற்கு நீர் “ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர்” என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள் தான் இறைத்தூதர்களைப் பின்பற்று வோர் ஆவர்.
நான் உம்மிடம் “அவ(ரைப் பின் பற்றுபவ)ர்கள் (நாளுக்கு நாள்) அதிக ரித்துவருகின்றனரா? அல்லது குறைந்துவருகின்றனரா?” என்று கேட்டேன். அதற்கு நீர் “அவர்கள் அதிகரித்தேவருகின்றனர்” என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை எனும் (இந்த) விஷயம் அவ்வாறுதான்; (வளர்ந்துகொண்டே) இருக்கும்.
நான் உம்மிடம் “அவரது மார்க்த்தில் இணைந்தபின் எவரேனும் அதன் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீர் ‘இல்லை’ என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை இத்தகையதே; அதன் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும்போது (அதைக் குறித்து எவருமே அதிருப்தியடையமாட்டார்).
நான் உம்மிடம் “அந்த மனிதர் உடன்படிக்கையை மீறுகின்றாரா?” என்று கேட்டேன். அதற்கு நீர் ‘இல்லை’ என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இத்தகையோரே; அவர்கள் உடன்படிக்கையை மீறமாட்டார்கள்.
நான் உம்மிடம் “அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றார்?” என்று கேட்டேன். அதற்கு நீர் “அல்லாஹ்வையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும், எவரையும் இணை கற்பிக்கக் கூடாது” என்று அவர் கட்டளையிடுவ தாகவும், சிலைகளை வழிபடக் கூடா தென்று உங்களுக்குத் தடை விதிப்பதாக வும், தொழுகை, உண்மை, தன்மானம் ஆகியவற்றை(க் கடைப்பிடிக்கும்படி) அவர் கட்டளையிடுவதாகவும் நீர் பதிலளித்தீர்.
நீர் சொல்வது உண்மையாயிருப்பின், அவர் என்னுடைய இந்தப் பாதங்கள் உள்ள இடத்திற்கு ஆட்சியாளராவார். இறைத்தூதரான அவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியரான) உங்களிலிருந்து வருவார் என்று நான் நினத்திருக்க வில்லை. நான் அவரைச் சென்றடை வேன் என அறிந்தால், நான் அவரைச் சந்திக்க பெரு முயற்சி எடுப்பேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால், அவரு டைய பாதங்களைக் கழுவியிருப்பேன் என்று கூறினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவருமாறு ஹிரக்ளீயஸ் உத்தரவிட்டார். அக்கடிதத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, புஸ்ரா நகர ஆட்சியர் (ஹாரிஸ் பின் அபீஷம்ர்) வாயிலாக ஹிரக்ளீயஸிடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்தார்கள்.12 ஹிரக்ளீயஸ் அதை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிட மிருந்து (கிழக்கு) ரோமாபுரியின் அதிபர் ஹரக்ளீயஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நல்வழியைப் பின்பற்றியவர்மீது சாந்தி நிலவட்டும்.
இறைவாழ்த்துக்குப்பின் (விஷயம் என்னவென்றால்); இஸ்லாத்தை ஏற்கு மாறு உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறு வீர்கள். (நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நன்மையை இரு மடங் காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்.
வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பொதுவான தொரு கொள்கையின்பால் நீங்கள் வாருங்கள். (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வழிபடக் கூடாது; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது; அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் வேறுசிலரைக் கடவுளாக ஆக்கிக்கொள்ளக் கூடாது; என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதற்குப் பிறகும்) அவர்கள் புறக்கணித்தால், நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிந்த) முஸ்லிம்கள்தான் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று சொல்லிவிடுங்கள். (3:64)
ஹிரக்ளீயஸ் தாம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபோது, அவர் அருகில் (அவரைச் சுற்றிலுமிருந்த மதகுருமார்கள், கிழக்கு ரோமானிய ஆட்சியாளர்கள் ஆகியோரின்) கூச்சலும் இரைச்சலும் அதிகரித்தது; குரல்கள் உயர்ந்தன. உடனே நாங்கள் (அந்த அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். நாங்கள் வெளியேற்றப்பட்டபோது நான் என் நண்பர்களிடம், “இப்னு அபீகப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (ரோமரின்) மன்னரே அவருக்கு (முஹம்மதுக்கு) அஞ்சுகிறாரே!” என்று சொன்னேன்.
(அன்று முதல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அம்மார்க்கம் விரை வில் வெற்றி பெறும் என்று உறுதிபூண்ட வனாக நான் இருக்கலானேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.
ஈலியா (பைத்துல் மக்தஸ்) நிர்வாகி யும் (மன்னர்) ஹிரக்ளீயஸின் நண்பரு மான இப்னு நாத்தூர் என்பார் ஷாம் (சிரியா) நாட்டுக் கிறித்தவர்களின் பேராயராக இருந்தவர் ஆவார். அவர் அறிவிக்கிறார்:
ஹிரக்ளீயஸ் ‘ஈலியா’ (பைத்துல் மக்தஸ்) வந்தபோது மனசஞ்சலத்துடன் காணப்பட்டார். அப்போது அவருடைய அரசவைப் பிரதானிகளில் சிலர் “தங்களின் (கவலை தோய்ந்த) இந்தத் தோற்றம் எங்களுக்குக் கவலை அளிக்கிறது” என்று கூறினார்கள்.
-மன்னர் ஹிரக்ளீயஸ், கிரகங்களைப் பார்த்து சோதிடம் சொல்வதில் கைதேர்ந்த வராயிருந்தார்- (தங்களின் கவலைக்குக் காரணம் என்னவென்று) அவர்கள் வினவியதற்கு, “இன்றிரவு நான் நட்சத் திரங்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தபோது, விருத்தசேதனர்களின் அரசர் தோன்றிவிட்டதைப் பார்த்தேன்” என்று ஹிரக்ளீயஸ் கூறிவிட்டு, “இந்தத் தலைமுறையினரில் விருத்தசேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையவர்கள் யார்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “(நாங்கள் அறிந்த வரையில்) யூதர்களைத் தவிர வேறு யாரும் விருத்தசேதனம் செய்துகொள்வதில்லை; அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்; உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்கெல்லாம் எழுதி, அங்குள்ள யூதர்களைக் கொன்றுவிடுமாறு கட்டளையிடுங்கள்” என்றார்கள்.
இவ்வாறு அவர்கள் உரையாடிக்கொண்டிருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கும் ஒரு மனிதரை ‘ஃகஸ்ஸான்’ குலத்தின் (குறுநில) மன்னர், ஹிக்ளீயஸி டம் அனுப்பியிருந்தார்; அம்மனிதர் ஹிரக்ளீயஸிடம் அழைத்துவரப்பட்டார்.
அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்ட ஹிரக்ளீயஸ், “இவரை அழைத்துச் சென்று இவர் விருத்த சேதனம் செய்திருக்கிறாரா, அல்லவா என்று சோதியுங்கள்” என்று ஆணையிட் டார். அவ்வாறே அவரைப் பார்வையிட்ட னர்; அவர் விருத்தசேதனம் செய்திருப் பதாக ஹிரக்ளீயஸிடம் கூறினார்கள். மேலும், அந்த மனிதரிடம் ஹிரக்ளீயஸ் அரபுக(ளின் பழக்க வழக்கங்க)ள் குறித்து விசாரித்தபோது, “அவர்கள் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்க முடையவர்கள்தான்” என்று குறிப்பிட்டார்.
உடனே ஹிரக்ளீயஸ், “இதோ இந்தத் தலைமுறையினரின் அரசர் தோன்றிவிட்டார்” என்று கூறினார்.
பின்னர் (இது தொடர்பாக ரோமின் தலைநகரான) ரூமியாவில் இருந்த தம் நண்பரும் கல்வி கேள்வியில் தமக்கு நிகரானவருமான (ளஃகாத்திர் எனும்) ஒவருக்குக் கடிதம் எழுதிவிட்டு, ஹிரக்ளீயஸ் ஹிம்ஸ் நகருக்குச் சென்றார்.13 அவர் ‘ஹிம்ஸ்’ சென்றடைவதற்குள் நண்பரிடமிருந்து (பதில்) கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், ஹிரக்ளீயஸின் ஊகப்படியே, நபிகளாரின் வருகை பற்றியும் அவர் இறைத்தூதர்தான் என்பது பற்றியும் கூறப்பட்டிருந்தது.
பின்னர் ஹிரக்ளீயஸ் ஹிம்ஸ் நகரிலிருந்த தமது கோட்டை ஒன்றுக்கு வருமாறு (கிழக்கு) ரோமின் பிரமுகர்கள் அனைவருக்கும் ஆணையிட்டார். (அவர்கள் வந்து சேர்ந்ததும்) அந்தக் கோட்டையின் கதவுகளையெல்லாம் பூட்டிவிடும்படி உத்தர விட்டார். அவ்வாறே அவை பூட்டப்பட்டன. பின்னர் ஹிரக்ளீயஸ் (அந்த அவையிலிருந்தவர்கள்) முன்தோன்றி, “ரோமானிய சமுதாயத்தாரே! உங்களுக்கு வெற்றியும் நல்வழியும் கிடைக்க வேண்டு மென்ற ஆசையும், உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா? இந்த இறைத் தூதரை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று பேசினார்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதைப் போன்று கோட்டைக் கதவுகளை நோக்கி அவர்கள் வெருண்டோடி, கதவுகளை நெருங்கியதும் அவை தாளிடப்பட்டி ருக்கக் கண்டனர். அவர்கள் வெருண் டோடுவதைப் பார்த்த ஹிரக்ளீயஸ் (நபி (ஸல்) அவர்கள்மீது) இந்த மக்கள் விசுவாசம் கொள்ளமாட்டார்கள் என்று நிராசையானபோது, “அவர்களை என்னிடம் திருப்பியனுப்புங்கள்” என்று (காவலர்களை நோக்கிச்) சொன்னார்.
(அவர்கள் திரும்பி வந்ததும்) “நீங்கள் உங்கள் மதத்தின் மீது கொண்டுள்ள பிடிப்பைச் சோதிக்கவே நான் சற்று முன்னர் அவ்வாறு பேசினேன். இப்போது (உங்கள் உறுதியை) அறிந்துகொண்டேன்” என்று கூறினார்.
உடனே (ரோமர்களின் வழக்கப்படி) அனைவரும் அவருக்குச் சிரம்பணிந்தனர். அவரைக் குறித்துத் திருப்தியும் அடைந்தனர். இதுவே (மன்னர்) ஹிரக்ளீயஸின் இறுதி நிலைப்பாடாக இருந்தது.14
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Comments
Post a Comment