கியாமா எப்போது வரும் என்று கேப்பவருக்கு, அந்நாளில் மலைகளை எப்படி இருக்கும் என்று கேட்பவருக்கு குர்ஆனை வேகமாக ஓதி விடவேண்டாம்
يَسْأَلُ اَيَّانَ يَوْمُ الْقِيٰمَةِ
“கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
(அல்குர்ஆன் : 75:6)
فَاِذَا بَرِقَ الْبَصَرُۙ
ஆகவே, பார்வையும் மழுங்கி-
(அல்குர்ஆன் : 75:7)
وَخَسَفَ الْقَمَرُۙ
சந்திரனும் ஒளியும் மங்கி-
(அல்குர்ஆன் : 75:8)
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُۙ
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
(அல்குர்ஆன் : 75:9)
يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ اَيْنَ الْمَفَرُّ
அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
(அல்குர்ஆன் : 75:10)
كَلَّا لَا وَزَرَ
“இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் : 75:11)
اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمُسْتَقَرُّ
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
(அல்குர்ஆன் : 75:12)
يُنَبَّؤُا الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ بِمَا قَدَّمَ وَاَخَّرَ
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
(அல்குர்ஆன் : 75:13)
بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌ ۙ
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 75:14)
وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗ
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
(அல்குர்ஆன் : 75:15)
لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
(அல்குர்ஆன் : 75:16)
اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
(அல்குர்ஆன் : 75:17)
فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ
எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 75:18)
ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗ
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
(அல்குர்ஆன் : 75:19)
وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنْسِفُهَا رَبِّىْ نَسْفًا ۙ
(நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப்பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி)விடுவான்” என்று நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 20:105)
فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۙ
“பின்பு, அவற்றைச் சமவெளியாக்கி விடுவான்.
(அல்குர்ஆன் : 20:106)
لَّا تَرٰى فِيْهَا عِوَجًا وَّلَاۤ اَمْتًا
“அதில் நீர் மேடு பள்ளத்தை காணமாட்டீர்.”
(அல்குர்ஆன் : 20:107)
يَوْمَٮِٕذٍ يَّتَّبِعُوْنَ الدَّاعِىَ لَا عِوَجَ لَهٗ وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا
அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
(அல்குர்ஆன் : 20:108)
يَوْمَٮِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَـهُ الرَّحْمٰنُ وَرَضِىَ لَـهٗ قَوْلًا
அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.
(அல்குர்ஆன் : 20:109)
يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِهٖ عِلْمًا
அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 20:110)
وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَىِّ الْقَيُّوْمِ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا
இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.
(அல்குர்ஆன் : 20:111)
وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا
எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான- நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 20:112)
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا وَّ صَرَّفْنَا فِيْهِ مِنَ الْوَعِيْدِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ اَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا
மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 20:113)
فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
(அல்குர்ஆன் : 20:114)
وَلَـقَدْ عَهِدْنَاۤ اِلٰٓى اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِىَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا
முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.
(அல்குர்ஆன் : 20:115)
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَ اَبٰى
“நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
(அல்குர்ஆன் : 20:116)
இதற்கு பின்பு ஆதம் நபி அவர் நிலைதடுமாறியதை மட்டும் வரலாறாக நபி ஸல் அவர்களுக்கு ஏன் கூற வேண்டும் என்று சூரா தாஹாவின் 117 லிருந்து மீதியை படிக்கவும்
Comments
Post a Comment