புஹாரி 3287. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், ‘‘அபுத் தர்தா (ரலி) அவர்கள் (இங்கு) வந்து, ‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களின் நாவால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கின்றாரா?› என்று கேட்டார்” எனச் சொன்னார்கள்.
முஃகீரா பின் மிக்ஸம் (ரஹ்) அவர்கள், ‘‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களின் நாவால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்” என்று அபுத் தர்தா (ரலி) அவர்கள் குறிப்பிட்டது அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களைத் தான்” என்று கூறினார்கள்.
Comments
Post a Comment