ஜின்களின் உணவு

 ஜின்களின் உணவு 


புஹாரி 3860. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அங்கத் தூய்மை செய்யும் தண்ணீரும் (இயற்கைத்) தேவைக்கான தண்ணீரும் வைத்திருக்கும் குவளையை நபி (ஸல்) அவர்களுடன் நான் சுமந்து செல்வேன். (ஒருநாள்) அவற்றைச் சுமந்துகொண்டு நான் நபி (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தபோது, “யார் அது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நான் அபூஹுரைராதான் (வருகிறேன்)” என்று நான் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “நான் (இயற்கைக் கடன் முடித்தபின்) துப்புரவு செய்வதற்காக எனக்குச் சில கற்களைத் தேடி (எடுத்து)க் கொண்டுவருவீராக. நீர் என்னிடம் எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்துவிடாதீர்” என்று சொன்னார்கள்.


நான் என் ஆடையின் ஓரத்தில் கற்களை வைத்துச் சுமந்துகொண்டு வந்து அவர்களுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பிவிட்டேன். அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது, “எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம் “நஸீபீன்'100 எனுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயி ருந்தன.


அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், “அவை எந்த எலும்பையும் எந்தக் கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று அல்லாஹ் விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்” என்று பதிலளித்தார்கள்.

Comments