குர் ஆன் அருளப்பட்ட முறையில் ஓதுதல்
முஸ்னத் அஹமது 35
நபித்தோழர்களான ஹஸ்ரத் அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஷைகைன் (ரலி), அதாவது ஹஸ்ரத் அபூபக்ர் (ரலி) மற்றும் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள், எனக்கு இந்த நற்செய்தியை கூறினார்கள். அதாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டதோ, அதே முறையில் அதன் ஓதுதலை உறுதியாக கடைபிடிக்க விரும்புகிறவர், இப்னு உம்மு அப்த், அதாவது ஹஸ்ரத் அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் கிராஅத் (ஓதும் முறை)ப்படி ஓதட்டும்."
Comments
Post a Comment