மற்ற சமுதாயத்தாரின் முன்பு நபி ஸல் அவர்களை பெருமை படுத்தி பேசலாமா?

 மற்ற சமுதாயத்தாரின் முன்பு நபி ஸல் அவர்களை பெருமை படுத்தி பேசலாமா?


அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அந்த முஸ்லிம், "அகிலத்தார் மீதும் முஹம்மது (ஸல்) அவர்களைத் தேர்வு செய்தவன் மீது ஆணையாக!" என்று கூறினார். அந்த யூதர், "அகிலத்தார் மீதும் மூஸா (அலை) அவர்களைத் தேர்வு செய்தவன் மீது ஆணையாக!" என்று கூறினார். அப்போது அந்த முஸ்லிம் தனது கையை ஓங்கி அந்த யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் நடந்த விவகாரத்தைத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து, அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அந்த முஸ்லிம் (நடந்ததை) அவர்களிடம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூஸா (அலை) அவர்களை விட என்னைச் சிறப்பிக்காதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் (அனைவரும்) மூர்ச்சையாகி விடுவார்கள்; நானும் அவர்களுடன் மூர்ச்சையாவேன். நானே முதலில் தெளிவு பெறுவேன். அப்போது மூஸா (அலை) அவர்கள் அர்ஷின் (இறைவனின் அரியாசனத்தின்) ஒரு ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவர் மூர்ச்சையானவர்களில் ஒருவராகி எனக்கு முன் தெளிவு பெற்றாரா, அல்லது அல்லாஹ் விதிவிலக்களித்தவர்களில் அவர் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது."



ஹதீஸ் தரம் : ஸஹீஹ்

ஸஹீஹுல் புகாரி : 2411

Comments