Energy lockdown soon from 2026


 


கடந்த இரண்டு மாதங்களாக, உலகளாவிய எரிசக்தி அமைப்பில் மிகவும் தீவிரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 


துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் இந்த புள்ளிகளை இணைத்து இதன் பின்னணியில் உள்ள ஆபத்தை இன்னும் உணரவில்லை.


எரிபொருள் விநியோகத்தின் முதுகெலும்பாக விளங்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் (Oil Refineries) தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகின்றன. 


இது ஒரு இடத்தில் மட்டும் நடக்கவில்லை; பல்வேறு நாடுகள், பல்வேறு கண்டங்கள் எனப் பல காரணங்களால் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. 


தீ விபத்துகள், வெடிப்புகள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் செயல்பாட்டு முடக்கங்கள் என அனைத்தும் ஒரு பொதுவான முடிவையே தருகின்றன: 


எரிபொருள் உற்பத்தி குறைப்பு. Energy lockdown 


உலகெங்கும் தொடரும் பாதிப்புகள் பற்றிய ஒரு பார்வை.


சமீபத்திய மாதங்களில் நிகழ்ந்த சில முக்கிய சம்பவங்களை வரிசைப்படுத்தினால் இதன் தீவிரம் புரியும்:


அமெரிக்கா: 

வட அமெரிக்காவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான Texas Port Arthur நிலையத்தில் மார்ச் இறுதியில் ஒரு பெரிய வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இதன் முக்கிய பிரிவுகள் வாரக்கணக்கில் முடங்கின.


மெக்சிகோ: 

உள்நாட்டு எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யத் தொடங்கப்பட்ட டோஸ் போகாஸ் (Dos Bocas) சுத்திகரிப்பு நிலையத்தில் சில வார இடைவெளியில் பல தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.


ஆஸ்திரேலியா: 

ஏப்ரல் மாதம் Geelong சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.


மத்திய கிழக்கு நாடுகள்: 

சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா (Ras Tanura) ட்ரோன் தாக்குதலால் மூடப்பட்டது. குவைத்தின் மினா அல்-அஹ்மதி மற்றும் ஈரானின் லாவன் சுத்திகரிப்பு நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.


ரஷ்யா: 

உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யாவில், இது ஒரு தொடர் கதையாக மாறியுள்ளது. கிரிஷி, நோர்சி, துவாப்ஸ், நோவோகுய்பிஷேவ்ஸ்க் போன்ற பல நிலையங்கள் ட்ரோன் தாக்குதல்களால் தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ முடக்கப்பட்டுள்ளன.


இந்தியா மற்றும் இஸ்ரேல்: 

இந்தியாவின் ராஜஸ்தானில் ஒரு சுத்திகரிப்பு நிலையத் தீ விபத்தும், இஸ்ரேலின் Haifa சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட உள்கட்டமைப்புச் சேதமும் இந்தப் பட்டியலில் இணைகின்றன.


இந்த விபத்துக்களால் உலகிற்கு என்ன பாதிப்புக்கள் என்பதை பார்க்கலாம்.


சுத்திகரிப்பு நிலையங்கள் என்பவை ஒரு சுவிட்சைப் போட்டால் இயங்கும் இயந்திரங்கள் அல்ல. ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட, அதைச் சரிசெய்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்.


சுத்திகரிப்பு நிலையங்கள் கச்சா எண்ணெயை பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளாக மாற்றுகின்றன. 


இவைதான் லாரிகள், விமானங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களை இயக்குகின்றன. உற்பத்தி குறையும் போது, விநியோகச் சங்கிலி (Supply Chain) உடைகிறது.


இந்த பாதிப்புகள் உடனடியாகத் தெரியாவிட்டாலும், மிக விரைவில் பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தும்:


எரிபொருள் பற்றாக்குறையினால் விலை அதீதமாக உயரும்.


டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்து, உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும்.


கிடைக்கும் எரிபொருளைக் கைப்பற்ற நாடுகளுக்கு இடையே போட்டி ஏற்படும்.


ஒரு எச்சரிக்கை

ஒன்று அல்லது இரண்டு நிலையங்கள் முடங்குவது சாதாரணமானது, ஆனால் ஒரே நேரத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட முக்கிய நிலையங்கள் முடங்குவது என்பது உலகளாவிய பேரழிவின் அறிகுறியாகும். 


இவை அனைத்தும் வெவ்வேறு நாடுகளில் நடக்கும் தனித்தனி விபத்துகள் என்று நாம் நம்பினால், அதைவிட அறியாமை வேறொன்றும் இருக்க முடியாது. 


உலகளாவிய எரிசக்தி அமைப்பில் விழும் இந்த ஒவ்வொரு அடியும் ஒரு மிகப்பெரிய திட்டத்தின் சதி என்பதை நாம் உணர வேண்டும்.


இது வெறும் விபத்துகளோ அல்லது ட்ரோன் தாக்குதல்களோ அல்ல; மாறாக இது ஒரு "எரிசக்தி முடக்கம்" (Energy Lockdown). 


நாம் ஏற்கனவே கண்ட  கொ.ரோனா lockdown போல, மக்களைக் கட்டுப்படுத்தவும் வாழ்வாதாரத்தை மாற்றியமைக்கவும் போடப்பட்ட ஒரு திரைமறைவுத் சதித் திட்டம் இது.


சர்வதேச அளவில் முன்வைக்கப்படும் 'Agenda 2030' -இன் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்று "End of Fossil Fuel” . கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இவ்வாறாகத் தொடர்ச்சியாக நிலைகுலைக்கப்படுவது, இயற்கையாக நடக்கும் மாற்றமல்ல; அது செயற்கையாகத் திணிக்கப்படும் நெருக்கடி என்பது தெளிவாக புரிகிறது. 


மக்களைப் பழைய எரிசக்தி முறைகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அவர்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான ஒரு படிநிலையே இது. 


இயங்கு சக்திக்கு மூலகாரணமாக உள்ள உலகத்தின் எரிசக்தி முடக்கப்படும் போது, சாமானிய மனிதனின் சுதந்திரத்தை இலகுவில் பறித்துவிடலாம் என்பது ஆளும் வர்க்கத்தின் கணிப்பு. 


Energy Lockdown ஒன்றிற்காக தயாராக இருங்கள்.


படித்ததில் பகிர்வது.

Comments